2/19/09

என்ன தேசம் இந்த தேசம்..

என்ன தேசம் இந்த தேசம்..


இனி குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் போது பேனா, பென்சில்களுடன், கத்தியும் லத்தியும் சேர்த்துதான் அனுப்ப வேண்டும் போல உள்ளது..

ரமணா படத்தில ஒரு வசனம் வரும்,

“ இந்த நாட்டுல பொது மக்களை அடிக்கிற உரிமை , மந்த்ரிகளுக்கோ, ஜனாதிபதிக்கோ கொடுக்கல, அதை போலீஸ் உங்க கையில கொடுத்திருக்கிறாங்க.. பொதுமக்கள் தப்பு செஞ்சா அவுங்கள அடிச்சு திருத்திற தகப்பன் ஸ்தானத்தில உங்கள வச்சிருக்காங்க” னு, விஜயகாந்த் போலீஸ பார்த்து பேசுவாரு..

ஆனா எந்த தகப்பனும் இப்படி போட்டு அடிக்க மாட்டான். ஒரு ஜனநாயக நாட்டில் காவல் துறை தனது பொறுப்பு மறந்து , கண்ணியம் மீறிய ஒரு காட்டுமிராண்டித்தனம் இது.
இதில் வக்கீல்கள் தவறா அல்லது காவல் துறை தவறா என்பதை பற்றி எல்லாம் பார்க்கும் முன், அடித்தது அதுவும் கைஉடையும்படி, மண்டை உடையும் படி அடித்தது சரியா ?.. சட்டம் படித்தவர்கள் நிலை இதுவென்றால்,சாதாரண நம் நிலைதான் என்ன...? இது தான் சுதந்திர இந்திய நாடா...

ஈழப்பிரச்சனைக்கு தான் பெரும்பான்மையா ஒன்று சேரவில்லை, இந்த பிரச்சனைக்காவது ஒன்று சேர்ந்து காவல்துறையை கண்டனம் செய்வோம்.

1 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in