10/10/08

வள்ளுவமும் வாலிபமும்..

பொதுவா வள்ளுவர், குரள்னா நம்மாளு தெரிச்சு ஓடி போறாங்க.. வாழ்க்கைக்கு எல்லா நேரத்திலும், எல்லா பிரச்சனைக்கும் தீர்வு சொல்லும் ஒரே நூல் திருக்குறள் தான்.. இன்றைய திரைப்பட பாடல்கள் சில வகை வள்ளுவரிடம் இருந்து எப்படி (Drive) வருவிக்கப்பட்டது என்பதை பார்ப்போம்.

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன். (குறள்-1116)


இது குறள்- இதுக்கு விளக்கம் தபு சங்கர் ஸ்டைலில்..
• இரவில் குளத்தருகே
மட்டும் போகாதே...
என்ன இரண்டு நிலாக்கள்
ஒரு சேர நகர்கிறதே..,
என்று
குளத்து மீன்கள்
குளம்புகின்றன...!

இதை தான் சிவகாமி என்ற படத்தில் கவிஞர் கா.மு.ஷெரிப் எழுதும் போது..

•வானில் முழு மதியை கண்டேன்
வனத்தில் ஒரு பெண்ணை கண்டேன்
வானமுழு மதியை போலே
மங்கை அவள் வதனம் கண்டேன்...!



இதேபோல் குறள் ஒன் ஒன் டபுள் ஜீரோ (என்ன பண்றது இப்படி கமர்சியலா சொன்னாலாவது படிப்பீங்கன்னுதான்..)

“கண்ணொடு கண்ணினை நோக்குஒக்கின் வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல ” (குறள்-1100)


விளக்கம்
• கண்கள்
நான்கும் பேசிவிட்டால்
உதடுகளும் கூட
பிரிய தேவையில்லை....

இதை தான் கண்ணதாசனும்
• பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா.. என்பார்.

குறள் டபுள் ஒன் டபுள் டூ..

”உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு”. (குறள்-1122)


விளக்கம்:
• நான் உடல்
நீ என் உயிர்..
நீ இருக்கும் வரைதான் மனிதன்
நீ பிரிந்தால் பிணம்..

மேலே சொன்ன இரண்டு குறளையும் சேர்த்த சமீபத்திய பாடல்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போததெனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகைவேனே மாற்றி
.
.
.
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்

உன்னை இன்றி வேறு ஒரு நினைவில்ல
இனி இந்த உனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலும் உன்னோட வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

வலை விரியும்

9/12/08

.....பென்ஜ்சில் படித்த கவிதைகள்..

பொதுவா பரிட்ச்சை எழுதறதே கொடுமையான விசயம், அதை மேற்பார்வையாளரா பார்க்கறது அதை விட கொடுமையானது.. அதுவும் எங்க என்ஜினியரிங் கல்லுரி மாணவங்க எழுதறத பார்க்கறது கொடுமையோ கொடுமை.. எக்சாம் ஆரம்பித்ததிலிருந்து எழுதாமலே இருப்பான், கடைசி அஞ்சு மணித்துளி மட்டும் வேகமா எழுதுவான்.. (ஏன்னா நாங்க வாங்கிட கூடாதில்ல..) அந்த மூணு மணி நேர ஜெயில் மேற்பார்வையாளர் பணியின் போது, சரி கீழ்பார்வை இட்டுதான் பார்க்கலாம்னு..பென்ஜ்சில பார்த்தா... பல கவிஞர்கள் பிறந்து இருக்கிறது தெரியுது.. அதில் மனதில் நின்ற சில கவிதைகள்...

என்னை மறந்த நீ
உன் வீட்டில் ஹாயாக...
உன்னை மறக்க முடியாமல்
நான் ரோட்டில் நாயாக.....

எண்ணமெல்லாம்
லேடி என்று இருப்பவன்
கண்ணமெல்லாம்
தாடி என்று திரிவான்...

உன்னிடம் ஹாய் சொல்லும்
ஒரு பெண்,
இன்னொருவனுக்கு
bye சொல்லியிருப்பாள்
ஜாக்கிரதை...

காதல் ஒரு
வினோதமான பரிட்சை
அது தேவதைகளுக்கு
பாஸ் மார்க்கும்
தேவதாஸ்களுக்கு
டாஸ்மாக்கும்
பரிசளிக்கிறது..

பெயிண்ட் அடிக்காத சுவரும்
Fair&lovely போடாத ஃபிகரும்
நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை..

உளி கல்லை
உரசினால்
அது சிற்பம்..
நான் உன்னை
உரசினால்
நீ கர்ப்பம்....

8/17/08

பாரதியின் வாழ்க்கைச் சம்பவம்.



வார்த்தை வேறு வாழ்க்கை வேறு என்று வாழாத பாரதிக்கு ஒருமுறை செட்டியார் ஒருவர் ஒரு ராஜ அங்கவஸ்தரமும், சீமை மேலங்கி (கோட்டும்) வாங்கி கொடுத்தார்.. அதை கொடுத்து ”பாரதி இது உங்களுக்காக நான் விஷேசமாக வாங்கி வந்தது..நீங்கள் அதை போட்டு வர வேண்டும்” என்றார். பாரதி அதை அணிந்து கொண்டு எப்போதும் போல கம்பீரமாக தெருவில் நடந்து செல்கிறார். அப்போது அங்கே வரும் ரிக்சா தொழிலாளி “ என்னா சாமி கோட்டு புதுசா..” என்று கேட்க, பாரதி அவனை பார்த்து “ வாடா பாண்டியா.. (அவர் எல்லோரையும் இப்படி அழைப்பது வழக்கம்..அதாவது எல்லோரும் பாண்டிய மன்னர்கள்..) இந்தா மேலாடையை நீயே வைத்துக்கொள்..” என்று கொடுத்துவிட்டார். வாங்கித் தந்த செட்டியாருக்கு ஏக கடுப்பு..” என்ன பாரதி இப்படி பண்ணிவிட்டீரே..:”என்றதுக்கு..பாரதி “எனக்கு தர நீவீர் உள்ளீர்.. அவனுக்கு தர என்னை விட்டால் யார் இருக்கிறார்..” என்றார்..

வாங்கி தருவது யாசகப் பொருளாக இருந்தாலும் அதை கொடுக்கும் போது யாசகம் வாங்குபவனைக் கூட மன்னனாய் பார்க்கும் பார்வை என் பாரதியை தவிர வேரு யாருக்கு வரும்...



வேத மறிந்தவன் பார்ப்பான், பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.
நீதி நிலைதவ றாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.

பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென் றோர்வகுப் பில்லை, - தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை.

நாலு வகுப்பும்இங் கொன்றே; - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.

சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.

சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?
:
:
அன்பென்று கொட்டு முரசே! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.
:
:
ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.


8/14/08

நமிதாவின் சுதந்திர தின வாழ்த்து



Hi மச்சான்ஸ்... எல்லாத்துக்கும் ஹாப்பி இண்டீஃபெண்டண்ஸ் டே....



Hi… Everybody... Wishing you happy Independence Day celebration... by bye




Hi எந்த மக்கள் எல்லாத்துக்கும் happy Independence Day.. எனக்க்கூ சிம்புடிருந்து கிடைச்ச மாறி உங்காளூக்கூம் சுதந்திரம்ம் கிடைக்க வாழ்த்தூக்க்காள்...


என்ன பார்க்கறீங்க எல்லா அலைவரியிலும் இவங்க வந்து வாழ்த்துக்கள் சொல்லும் போது...ஏன் எங்க பதிவுகளில் வரக்கூடாதா...


சுதந்திர இந்தியா வாழ்க.....


இதை கேட்பது இந்தியா மட்டை பந்தில் ஜெயிக்கும் போதும், சுதந்திர தின விழாவின் போதும்..குடியரசு தினத்தின் போதும். இப்படிதான் பல இடங்களில் நாம் நமது தேச பக்தியைக் காட்டுகிறோம்.

இருந்தாலும்

நான் ஒரு இந்திய குடிமகன், அணு சக்தி ஒப்பந்தத்தில் என்ன சாரம் உள்ளது என்று எனக்கு தெரியாது..ஆனால் என் சார்பில் பிரதமர் கையெழுத்து இட உள்ளார். நாளை என் சந்ததியே இதன் விளைவுகளை சந்திக்கும்... இதெல்லாம் தெரிந்தும் ஜெய் ஹிந்த் சொல்ல நான் ஒரு சுதந்திர நாட்டில் தானே வசிக்க வேண்டும்.


வேலையில் சாதனை படைத்து இறந்தாள் என்று மேலை நாடு சென்று அங்கு குடியுரிமை பெற்று வாழ்ந்தவளுக்கு இங்கே பாராட்டு அவள் பெயரில் பட்டயம், ஆனால் இங்கே பாபா விலும், ஸ்ரீ ஹரி கோட்டாவிலும் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கூட இல்லை..



இதெல்லாம் விட லஞ்சம், கைக் கூலித்தனம்.. மக்கள் மட்டும் அல்ல மக்கள் பிரதி நிதிகளும். எல்லோருக்கும் பணம் என்பது தான் முதல் நிலை.. இப்படி நாட்டின் நிலை இருக்க.. 2020 என்ற இலக்கை ஒருவர் சொல்கிறார், இந்த நாட்டில் இருந்து கொண்டே மற்ற நாடுகளுக்காக உழைக்கும் என் இளைஞரைப் பார்த்து..



இந்திய வரலாற்றைப் பாருங்கள், வந்தவர்கள் அனைவரும் இந்தியாவை வென்றார்கள்.(மதனின் வந்தார்கள்,வென்றார்கள்....)இதற்கு ஒரே காரணம் நம்முடைய தேசப்பற்றுதான். ஒரு சாரர் முறையாகவோ, வன்முறையாகவோ வந்தவர்களை எதிர்க்க, இவர்களை ஒருசாரர் காட்டிக் கொடுத்து கூலி வாங்க, பல குடும்பங்கள் சாக, தளபதிகள் நோக, கொள்கைகள் வேக, இதெல்லாம் போக முடிவில் எல்லோருக்கும் விடுதலை. பிறகு அடுத்த ஆள் உள்ளே நுழைய..( p.வாசு style REPEATU)

இது தான் உண்மையான இந்தியா இடையில் வந்த காந்தி, நேரு, பாரதி , வ.வு.சி.,காமராஜ் போன்றோர்கள் லேசாக அதன் நிறத்தை மாற்றினார்கள், ஆனால் பயனில்லை மறுபடியும் பழைய நிறத்திற்க்கு வந்தாச்சு...

இப்போதைய இந்தியர்களின் தேசிய கீதம் பணம், தேசிய சின்னம் பணம், தேசிய மொழி பணம், தேசிய ஒற்றுமை பணம்...அதற்க்காக எந்த ஒப்பந்தமும் போடுவோம், கூட்டணி மாற்றுவோம், விளையாடி ஜெயிப்போம், பின்பு தோற்ப்போம், வெளிநாடுகளில் குடிபெயர்வோம், வெளி நாடுகளுக்கு அடிமையாகி உழைப்போம்..


சரி..சரி.. வம்பெதற்க்கு இப்படியே சொன்னா என்னை தேச துரோகின்னு சொல்லிடுவீங்க..அதனால நானும் சொல்லி வைக்கிறேன்..



.........ஜெய் ஹிந்த்... பாரத மாதா வாழ்க......................................

சித்தன் சவுண்டு சர்விஸிலிருந்து...(காமெடி)





சித்தன் சவுண்டு
சர்விஸிலிருந்து....






இந்த ஊருக்கு தெரிவிச்சுக்கற மொத காமெடி என்னான்னா..



டீச்சர் : உங்க படிப்பு மேலே யாருக்கு அக்கரை அதிகம்...
மாணவன் : எங்க ஊர் பஸ் கண்டெக்டருக்கு தான்..
டீச்சர் : எப்படி..
மாணவன் : அவரு தான் தினமும் நீ பாஸா.. நீ பாஸா.. நீ பாஸா..ன்னு
எல்லாத்தையும் கேக்றாரு டீச்சர்.



பின்னூட்டம் 1
OK, அட்டாக் மீ.. நீ எங்கிட்டிருந்து வேணா பால போடு
அதை எப்படி பேஸ் பண்ரனு பாரு...





ஆசிரியை : மாணவர்களே, உங்க பெயர், ஹாபி(hobby) வரிசையா எழுந்து சொல்லுங்க
மாணவன் 1: என் பெயர் குமார், ஹாபி சோபா மேல் தூங்குவது
மாணவன் 2: என் பெயர் கண்ணன், ஹாபி சோபா மேல் தூங்குவது
மாணவன் 3: என் பெயர் சோமு, ஹாபி சோபா மேல் தூங்குவது
ஆசிரியை : என்னப்பா எல்லோருக்கும் ஒரே ஹாபி..சரி girls சொல்லுங்க..

மாணவி : என் பெயர் சோபா.....
ஆசிரியை : சரி..சரி.. உக்காருமா ...இதுக்கு மேல ஒன்னும் சொல்ல வேண்டா


பின்னூட்டம் 2
ஹ.ஹ..ஹா..தாமசு...தமாசு...
அடங் கொன்னியா இவனெல்லாம் காமெடி பண்ரா என் ஸ்டைல யாரது கமெண்டு போடுக்கப்பா.





இரண்டு நாய் முதலாளிகள் பேசிக்கறாங்க...

1: என் நாய் super நாய் தெரியுமா.. காலையில பேப்பர் வந்தவுடன் வாங்கிட்டு வந்து என்னக்கு கொடுத்துட்டு
டீ போட்டு கொண்டு வரும்..பின்னாடி தண்ணி காயவைத்து எல்லா வேலையும் செய்யும்..
2: ஆமா.. ஆமா. என் வீட்டு நாயும் அப்படி தான்..



பின்னுட்டம் 3
அடப்பாவி.. அடப்பாவி.. இந்த காமெடிக்கு என் படத்த பின்னூட்டம்
போட்டு எல்லா தாய்மார்களிட்ட அடிவாங்க வச்சுருவ
போல இருக்கேடா..
காமெடிய மாத்து.. காமெடிய மாத்து..











ராசாத்தி ரேடியோஸிலிருந்து வரும்
காமெடி...




தந்தை : என் பயன் ரொம்ப குசும்பு புடிச்சவன், இந்த வயசுலேயே எங்க வீட்டுக்குவர வேலைக்காரிக எல்லாத்தையும் கர்பமாக்கிட்டான்..
வந்தவர் : என்ன 3 வயசு பையனா இப்படி..எப்படி இது....!
தந்தை : அவன் விளையாட்டா என்னோட எல்லா காண்டத்தையும் எடுத்து உசியில ஓட்டை போட்டு வச்சுர்றான்..




பின்னூட்டம் 4
ஏப்பா..சுத்த பத்தமா இருக்குற எங்களபத்தி காமெடி பண்ணலியே..



ஒரு பொண்ணுக்கு எட்டு பிள்ளைங்க.. எட்டுக்கும் ‘பீட்டர்’னு பேரு வைச்சா..
நம்மாளு ” என்னமா கூப்பிடும் போது குழப்பம் வராதா”, என்று கேட்க..
அதெப்படி..எல்லோருக்கும் இனிசியல் வேறதானே..ன்னா..
(இந்த நிலைமை சீக்கிரம் தமிழ் நாடுக்கும் வரும்..என்ன
நான் சொல்றது....)


இது இப்படி இருக்க இங்கே...
காதலன் : கண்ணே.. உனக்காக நான் என் பெத்தவங்களை விட்டுட்டு வந்திருக்கேன்..
காதலி : இதென்ன பிரமாதம்.. உனக்காக நான் என் பெத்த பிள்ளைகளை விட்டுட்டு வந்திருக்கேன் தெருயுமா..



என்னூட்டம்
நெக்ஸ்டு மீட் பண்ணலாம்.. வரட்டா..

8/9/08

கண் தெரியவில்லைனா காசி கண் திறக்கவச்சா அது காசி ஆனந்தன்..

ஈழத்து கவிஞர்.தற்சமயம் இருப்பது சென்னை..
காதல்+ கற்பனைகள்= கவிதைகள் என்று சுழலும் கவிஞர்களுக்கு இவர் ஒரு சாட்டை அடி.. சும்மா சொன்னா நம்ப மாட்டீங்க, உங்களுக்காக இவரது நறுக்குகள்.. சில


அடக்கம்
அடக்கம் செய்யப்படுகிறோம்...
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும

நாற்காலி
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.

கோயில்
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.

தளை
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.

காலம்
உன் கையிலா கடிகாரம்?
கடிகாரத்தின் கையில் நீ.

நிலவு
புராணமாய் இறைவனின் தலையில்
வரலாறாய் மனிதனின் காலில்.

இருள்
பகலிலும் தலைவர்கள்
குத்துவிளக்கு ஏற்ற
நிகழ்ந்தன விழாக்கள்.
தேடுகிறோம்...
எங்கேவெளிச்சம்?

தாஜ்மஹால்
காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்
காதலை புதைத்த இடம் காட்டு
எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட
அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?

சாமி
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்

மேடை
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா...நீ என்றேன்
கைதட்டினான்

திமிர்
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்

குப்பைத்தொட்டி
அலுவலகத்தில் இருக்கிறவனுக்கு
இது குப்பைதொட்டி
குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு
இதுஅலுவலகம்.

விளம்பரம்.
குளிப்பாட்டி
அழுக்காக்குகிறான்
பெண்ணை.....

இவர் எழுதிய படைப்புகள் கொஞ்சம் எனினும், நெஞ்சத்தை சிகப்பாக்கும் கூரிய வரிகள்.. இவரை பதிப்பதில் இந்த பதிவு பெருமை கொள்கிறது...

8/8/08

இன்றைய கல்வியியல் நிலை..

சென்ற வாரம் எங்கள் ஊரில் உள்ள அனைத்து புத்தக கடைகளிலும் கூட்டம்.. பேனா வாங்க போன நான் பேய் அடித்து வந்த காதை இது..

அட்டை(chat) படம் தயாரிக்க வேண்டி படங்கள் உள்ள வண்ண தாள்களை வாங்க அனைவரும் நின்று கொண்டு இருந்தனர். இதில் ஒருவர் “ ஏன்பா எனக்கு புதுசா யாருக்கும் கொடுக்காத ஒரு பிக்சர் ஷீட் கொடு.. அப்ப தான் மத்தவங்கள விட அதிக மார்க் வாங்க முடியும்..”
நான் நினைத்தேன்...”சரி ஏதோ B.ED, M.ED படிப்பாங்க போல.. தேர்வு நேரம் போலன்னு..”
அவுங்க கிட்ட என் சந்தேகத்தை கேட்டேன்..
அதுக்கு ” எல்லா என் பையனுக்கு தான் வாங்கறேன்...”
பையன் எத்தனாவது படிக்கிறான் என்றதுக்கு..
” இப்ப தான் Pre K.G சேத்தியிருக்கேன்..” இந்த பதில் கேட்டு அப்படியே நான் shock ஆயிட்டேன்(வடிவேலு மாதிரி)..அப்பவே முடிவு பண்ணிட்டேன் blog எழுத நல்ல விசியம் சிக்கியாச்சு......
(நம்ம குசும்பன் சொன்ன மாதிரி...)

Pre K.G என்ற மழலையர் கல்வி இப்போது தாய் மார்களிடம் வெகு பிரபலயம் அடைந்துள்ளது..இது ஒரு கெளரவம் கூட. இந்த கல்வி முறை சரியாக உள்ளதா என்று பார்த்தால் கிடையாது..
மாண்டிசோரி, சீன கல்விமுறை என்று பல பெயர்கள் சொன்னாலும் அதை செயல்படுத்தும் ஆசிரியர் மன்னிக்கவும் ஆசிரியை வெரும் ஒரே ஒரு பட்டயம் (Bsc,B.Com,B.B.M) பெற்றவர்கள் தான்..ஏன் இன்னும் இவர்கள் கல்வி கற்பித்தல் முறைகள் என்ற பாடத்தை கூட பார்த்ததில்லை.,படித்ததில்லை(B.Ed,M.Ed, வரும் பாடங்கள்)..இது இப்படி இருக்க இவர்கள் தரும் வீட்டுப்பாடம் (Assignment என்ற பெயரில்) பிஞ்சு உள்ளங்களில் ஏற்படுத்தும் பாதிப்பால் அவர்களுக்கு சுய சிந்தனை வளர்வதேயில்லை.. (CREATIVE Thought). அதுவும் இது போன்ற படங்கள் ஒட்டுவது பெற்றோர்களுக்கு தரும் வீட்டுப்பாடம் இதனால் பையனுக்கு என்ன பயன் என்று யோசிக்கரார்களா அந்த காட்டன் புடைவையில் வரும் கடலோர கவிதை ரேகாக்கள்.. அந்த வயதில் அவனுக்கு கத்திரி கொண்டு வெட்ட தெரியுமா, ஒட்ட தெரியுமா.. கேட்டால் நாம் ஒட்டி அவர்களுக்கு சொல்லி தரவேண்டுமாம்..இவர்கள் அதை பார்த்து மார்க் போடுவார்களாம்.. அதில் என் பையன் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்று பொறாமை வேறு...
இப்படி படிக்கும் மாணவனுக்கு இறுதி வரை அடிமை வாழ்க்கை தான், ஒரு MNC யோ, call center வேலையோ !!!..

தாய்மார்களே சிந்திப்பீர் 5 வயது வரை தான் அந்த குழந்தை சுதந்திரமாக வளரும் உங்களிடம், உங்களினால்., அதன் சுதந்திரத்தை நாகரீக மோகத்தால் நீங்களே கருக்கி, எதிர்கால விஞ்ஞானியை குறைத்து விடாதீர்கள்..இப்போதே Research Scholor நிரம்ப குறைவு இங்கே..

7/24/08

இத கேளுங்க முதல்ல

நல்ல இசை மட்டும் அல்ல.. கவிதை துவம் வாய்ந்த வரிகள் கூட..

Listen to Subramaniyapuram Audio Songs at MusicMazaa.com

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போததெனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகைவேனே மாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சிந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போததெனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்

உன்னை இன்றி வேறு ஒரு நினைவில்ல
இனி இந்த உனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலும் உன்னோட வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகைவேனே மாற்றி

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போததெனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

7/20/08

ஈரோடு தமிழன்பன்- கவிதை தொகுப்பில் இருந்து..

கவிஞர் திரு.ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை தொகுப்பில் இருந்து

ஈரோடு தமிழன்பன்


பொதுவா கவிதை என்பது
படித்த உடன் ஈர்க்கும்
பின் இறுக்கும்
சிலநாள் சென்றாலும் இருக்கும்
மனதில்..

இவரது கவிதை அதையும் தாண்டியது..ஹைக்கூ, சென்ரியூ, மற்றும் முற்போக்கு கவிதைகளின் தொகுப்பு...(படிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து..அவரவர் எண்ணபடி-தசாவதாரம் மாதிரி )
இதை படித்து உங்களது கருத்தை பின்னுட்டமாக தரும்படி வேண்டுகிறேன்.



மானத்தை என்கிருந்து பூட்டுவது ?
உள்ளே இருந்தா?
வெளியே இருந்தா ?
என்று கேட்டான் மாணவன்
ஆசான் சொன்னார்
பூட்டுவது நீ என்று
நினைத்துக் கொண்டு
எங்கிருந்து பூட்டினாலும் பயனில்லை.


காம்புக்கு வேறென்ன
கவுரவம் வேண்டும்
தாங்கிக் கொண்டிருக்க
ஒரு ரோஜாப்பூ இருந்தால் போதாதா?


ஒரு சிறகைத் தலையில் சூடி
அரசரானார்கள் நம் முன்னோர்கள்
நாமோ
தங்கத்தை மகுடமாய் சூடி
அதற்கு அடிமையானோம். ...!


பாதை போடுவதும் இல்லை
பாதையை அழிப்பதும் இல்லை
பறவைகள் சொன்ன பாடம்...

படித்ததில் அழுதது.....

‘‘ஒரே ஒரு ஊருக்குள்ளஒரே ஒரு அம்மா அப்பா!
ஒத்தப் புள்ள பெத்தாங்கடாஅது யாரு... உங்க அப்பா!பொத்திப்பொத்தி வளத்தாங்கபாசத்தை ஊட்டிஎனக்கு வாங்கித் தர்றேன்னாங்கநிலாவக் காட்டி
நடந்து பழகச் சொன்னாங்களேநட வண்டி ஓட்டி
மவராசன் நீதான்னாங்கஅம்பாரியாட்டி
நான் படிக்க நெனச்சதெல்லாம்நீங்க படிக்க வேணும்
என்னுடைய கவலைகளை நீங்கபோக்க வேணும் உங்களப்பெத்தது சந்தோஷம்
நான் உங்களப்பெத்தது சந்தோஷம்!’’
ஏவி.எம்.மில் எடிட்டிங் டேபிள் முன் அமர்ந்திருக்கிறேன். ‘தவமாய் தவமிருந்து...’ படத்தின்பாடல் காட்சியைச் செதுக்கிக்கொண்டு இருக்கிறேன்.ஒரு எளிய குடும்பம்... தீபாவளிக்கும் திருநாளுக்கும்கூட காசு இல்லாமல் கையைப் பிசைகிறஅப்பன். பிள்ளைகளைத் தவிர வேறெதுவும் அறியாத அம்மா. பள்ளிக்கூட ‘டூர்’ போகக் காசுஇல்லை. ஏங்கி ஏங்கி அழும் சின்னவனையும், எதுவும் பேசாமல் நிற்கும் பெரியவனையும்சமாதானப்படுத்த ஒரு சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அம்மாவும் அப்பாவும் கிராமத்துக்குச்செல்கிற வழியில் கசிகிறது பாடல்...ஊர்க் கண்மாயில் குளிக்கிறார்கள். குலசாமியைக் கும்பிடுகிறார்கள். அட்டைக் கத்திகட்டபொம்மனாக ஆடுகிறார்கள். நொங்கு கீறி ருசிக்கிறார்கள். மரக்கிளையில் ஊஞ்சல் கட்டிஆடுகிறார்கள். தாயின் மாரிலும் தகப்பன் தோளிலுமாக விளையாடுகிறார்கள் பையன்கள்.
‘‘எத்தனை எத்தனை சந்தோஷம்சிங்கத்தைப் பெத்ததில் சந்தோஷம்!’’
எத்தனை எத்தனை முறை அந்தக் காட்சியை ஓட்டிப் பார்த்தாலும் திமுக்கென கண்ணீர்பூத்துவிடுகிறது எனக்கு!இது யாரோ ஒரு அப்பன் ஆத்தா கதை இல்லை. இந்தத் தமிழ் மண்ணில் ஒவ்வொருஅப்பன் ஆத்தா கதையும் இதுதான். பிள்ளைகள் வயிறு நிறைவதைப் பார்த்து, பெற்றவர்கள்மனசு நிறைகிற மண் இது!ஒவ்வொரு தாயும் தகப்பனும் கூடி மகிழ்ந்து ஒரு உயிரை மட்டும் படைப்பதில்லை...உலகத்தையே படைக்கிறார்கள். தாய் சுரக்கிற ஒவ்வொரு துளி தாய்ப்பாலும், கனவுவிதைக்குத் தெளிக்கிற கருணை மழைத்துளி. குடும்பத்தின் ஜீவிதத்துக்கு தகப்பன் சிந்துகிறஒவ்வொரு துளி வியர்வையும், ஒரு புதிய பிருந்தாவனத்துக்கான தியாக மழைத்துளி!

.......சேரன்....

7/7/08

கவிதை

விழாமல் இருக்கும்
தஞ்சை கோபுரம்
மட்டும் அழகுஅல்ல
விழும் உன் நிழலும்தான்....


  • வாழ்க தமிழ்

  • வாழ்வே தமிழ்

  • வாழாவே தமிழ்

6/18/08

அரசியல் பேசலாம் வாங்க .....

நண்பர்களே ... நான் பார்த்த ஒரு blog
"அண்ணாகண்ணன் வெளி
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, June 09, ௨00௮"
"இராம.கோபாலன் உடன் அரட்டை அடிக்க "

அதில் எழுதி இருப்பது என்னை கொதிக்க செய்தது(அமைதியாக) ......

அதற்க்கு என் கமென்ட்
"வணக்கம்... ராம கோபலன் அவர்களக்கு ஒரு இந்துவின் சார்பாக கண்டனம்....தசாவதாரம் போன்ற படங்கள் வெளிவரும் போது இந்துக்கள் சார்பாக எதிர்க்கும் உரிமை இவருக்கு யார் கொடுத்தது... நானும் இந்து தான்...வரலாறுகளில் உள்ள உண்மை படிக்க பட வேண்டிய ஒன்று.. அதனால் ஒரு வளர்ந்த சமயத்தினர் அடிதிக்கொல்லுவார்கள் என்பது அவர்கள் அறிவிலி என்பதை காட்டுகிறது... அம்மணமாக நடித்த நடிகைகள் அம்மனாக நடித்த போது வராத கோபாலன் இப்போது மட்டும் என்ன..?ராம நாராயணன் இந்து படங்கலில் எத்தனையோ மூடநம்பிக்கையை கூறும் போது இவர் எங்கே போனார்..?
மதி கெட்டுபோன மத சமயத்தினரை வைத்து மதம் அரசியல் செய்யாதிர்..இந்து மதம் புனிதமானது..... "

இதை அவர் வெளியிடுவாரா என்று பார்ப்போம் !!..
இது பற்றி
உங்களது கருத்து என்ன என பதிவுசெய்யுங்கள்...விவாதிப்போம்

5/29/08

இப்பதான் வந்திருக்கறோம்..........

நாங்கள் பொறுக்கி திரிவது தமிழ் தெருக்களில் ....
அன்புடன்...........
கிரிஷ்......
குணா.......