8/8/08

இன்றைய கல்வியியல் நிலை..

சென்ற வாரம் எங்கள் ஊரில் உள்ள அனைத்து புத்தக கடைகளிலும் கூட்டம்.. பேனா வாங்க போன நான் பேய் அடித்து வந்த காதை இது..

அட்டை(chat) படம் தயாரிக்க வேண்டி படங்கள் உள்ள வண்ண தாள்களை வாங்க அனைவரும் நின்று கொண்டு இருந்தனர். இதில் ஒருவர் “ ஏன்பா எனக்கு புதுசா யாருக்கும் கொடுக்காத ஒரு பிக்சர் ஷீட் கொடு.. அப்ப தான் மத்தவங்கள விட அதிக மார்க் வாங்க முடியும்..”
நான் நினைத்தேன்...”சரி ஏதோ B.ED, M.ED படிப்பாங்க போல.. தேர்வு நேரம் போலன்னு..”
அவுங்க கிட்ட என் சந்தேகத்தை கேட்டேன்..
அதுக்கு ” எல்லா என் பையனுக்கு தான் வாங்கறேன்...”
பையன் எத்தனாவது படிக்கிறான் என்றதுக்கு..
” இப்ப தான் Pre K.G சேத்தியிருக்கேன்..” இந்த பதில் கேட்டு அப்படியே நான் shock ஆயிட்டேன்(வடிவேலு மாதிரி)..அப்பவே முடிவு பண்ணிட்டேன் blog எழுத நல்ல விசியம் சிக்கியாச்சு......
(நம்ம குசும்பன் சொன்ன மாதிரி...)

Pre K.G என்ற மழலையர் கல்வி இப்போது தாய் மார்களிடம் வெகு பிரபலயம் அடைந்துள்ளது..இது ஒரு கெளரவம் கூட. இந்த கல்வி முறை சரியாக உள்ளதா என்று பார்த்தால் கிடையாது..
மாண்டிசோரி, சீன கல்விமுறை என்று பல பெயர்கள் சொன்னாலும் அதை செயல்படுத்தும் ஆசிரியர் மன்னிக்கவும் ஆசிரியை வெரும் ஒரே ஒரு பட்டயம் (Bsc,B.Com,B.B.M) பெற்றவர்கள் தான்..ஏன் இன்னும் இவர்கள் கல்வி கற்பித்தல் முறைகள் என்ற பாடத்தை கூட பார்த்ததில்லை.,படித்ததில்லை(B.Ed,M.Ed, வரும் பாடங்கள்)..இது இப்படி இருக்க இவர்கள் தரும் வீட்டுப்பாடம் (Assignment என்ற பெயரில்) பிஞ்சு உள்ளங்களில் ஏற்படுத்தும் பாதிப்பால் அவர்களுக்கு சுய சிந்தனை வளர்வதேயில்லை.. (CREATIVE Thought). அதுவும் இது போன்ற படங்கள் ஒட்டுவது பெற்றோர்களுக்கு தரும் வீட்டுப்பாடம் இதனால் பையனுக்கு என்ன பயன் என்று யோசிக்கரார்களா அந்த காட்டன் புடைவையில் வரும் கடலோர கவிதை ரேகாக்கள்.. அந்த வயதில் அவனுக்கு கத்திரி கொண்டு வெட்ட தெரியுமா, ஒட்ட தெரியுமா.. கேட்டால் நாம் ஒட்டி அவர்களுக்கு சொல்லி தரவேண்டுமாம்..இவர்கள் அதை பார்த்து மார்க் போடுவார்களாம்.. அதில் என் பையன் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்று பொறாமை வேறு...
இப்படி படிக்கும் மாணவனுக்கு இறுதி வரை அடிமை வாழ்க்கை தான், ஒரு MNC யோ, call center வேலையோ !!!..

தாய்மார்களே சிந்திப்பீர் 5 வயது வரை தான் அந்த குழந்தை சுதந்திரமாக வளரும் உங்களிடம், உங்களினால்., அதன் சுதந்திரத்தை நாகரீக மோகத்தால் நீங்களே கருக்கி, எதிர்கால விஞ்ஞானியை குறைத்து விடாதீர்கள்..இப்போதே Research Scholor நிரம்ப குறைவு இங்கே..

3 comments:

ramesh sadasivam said...

தமிழ் பொறுக்கியின் பொறுப்பான எழுத்து. கல்வி என்னும் பெயரில் நடக்கும் கோமாளித் தனங்களை வைத்து ஒரு திரைப்படமே எடுக்கலாம்.

ramesh sadasivam said...

தங்கள் தளத்தின் தோற்ற அமைப்பு அற்புதம்.

தமிழ் பொறுக்கி said...

நன்றி திரு.ஸ்ரீ ரமேஸ், தங்கள் வருகை எங்களை அதிகம் எழுத செய்யும்...