7/24/08

இத கேளுங்க முதல்ல

நல்ல இசை மட்டும் அல்ல.. கவிதை துவம் வாய்ந்த வரிகள் கூட..

Listen to Subramaniyapuram Audio Songs at MusicMazaa.com

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போததெனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகைவேனே மாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சிந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போததெனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்

உன்னை இன்றி வேறு ஒரு நினைவில்ல
இனி இந்த உனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலும் உன்னோட வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகைவேனே மாற்றி

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போததெனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

7/20/08

ஈரோடு தமிழன்பன்- கவிதை தொகுப்பில் இருந்து..

கவிஞர் திரு.ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை தொகுப்பில் இருந்து

ஈரோடு தமிழன்பன்


பொதுவா கவிதை என்பது
படித்த உடன் ஈர்க்கும்
பின் இறுக்கும்
சிலநாள் சென்றாலும் இருக்கும்
மனதில்..

இவரது கவிதை அதையும் தாண்டியது..ஹைக்கூ, சென்ரியூ, மற்றும் முற்போக்கு கவிதைகளின் தொகுப்பு...(படிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து..அவரவர் எண்ணபடி-தசாவதாரம் மாதிரி )
இதை படித்து உங்களது கருத்தை பின்னுட்டமாக தரும்படி வேண்டுகிறேன்.



மானத்தை என்கிருந்து பூட்டுவது ?
உள்ளே இருந்தா?
வெளியே இருந்தா ?
என்று கேட்டான் மாணவன்
ஆசான் சொன்னார்
பூட்டுவது நீ என்று
நினைத்துக் கொண்டு
எங்கிருந்து பூட்டினாலும் பயனில்லை.


காம்புக்கு வேறென்ன
கவுரவம் வேண்டும்
தாங்கிக் கொண்டிருக்க
ஒரு ரோஜாப்பூ இருந்தால் போதாதா?


ஒரு சிறகைத் தலையில் சூடி
அரசரானார்கள் நம் முன்னோர்கள்
நாமோ
தங்கத்தை மகுடமாய் சூடி
அதற்கு அடிமையானோம். ...!


பாதை போடுவதும் இல்லை
பாதையை அழிப்பதும் இல்லை
பறவைகள் சொன்ன பாடம்...

படித்ததில் அழுதது.....

‘‘ஒரே ஒரு ஊருக்குள்ளஒரே ஒரு அம்மா அப்பா!
ஒத்தப் புள்ள பெத்தாங்கடாஅது யாரு... உங்க அப்பா!பொத்திப்பொத்தி வளத்தாங்கபாசத்தை ஊட்டிஎனக்கு வாங்கித் தர்றேன்னாங்கநிலாவக் காட்டி
நடந்து பழகச் சொன்னாங்களேநட வண்டி ஓட்டி
மவராசன் நீதான்னாங்கஅம்பாரியாட்டி
நான் படிக்க நெனச்சதெல்லாம்நீங்க படிக்க வேணும்
என்னுடைய கவலைகளை நீங்கபோக்க வேணும் உங்களப்பெத்தது சந்தோஷம்
நான் உங்களப்பெத்தது சந்தோஷம்!’’
ஏவி.எம்.மில் எடிட்டிங் டேபிள் முன் அமர்ந்திருக்கிறேன். ‘தவமாய் தவமிருந்து...’ படத்தின்பாடல் காட்சியைச் செதுக்கிக்கொண்டு இருக்கிறேன்.ஒரு எளிய குடும்பம்... தீபாவளிக்கும் திருநாளுக்கும்கூட காசு இல்லாமல் கையைப் பிசைகிறஅப்பன். பிள்ளைகளைத் தவிர வேறெதுவும் அறியாத அம்மா. பள்ளிக்கூட ‘டூர்’ போகக் காசுஇல்லை. ஏங்கி ஏங்கி அழும் சின்னவனையும், எதுவும் பேசாமல் நிற்கும் பெரியவனையும்சமாதானப்படுத்த ஒரு சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அம்மாவும் அப்பாவும் கிராமத்துக்குச்செல்கிற வழியில் கசிகிறது பாடல்...ஊர்க் கண்மாயில் குளிக்கிறார்கள். குலசாமியைக் கும்பிடுகிறார்கள். அட்டைக் கத்திகட்டபொம்மனாக ஆடுகிறார்கள். நொங்கு கீறி ருசிக்கிறார்கள். மரக்கிளையில் ஊஞ்சல் கட்டிஆடுகிறார்கள். தாயின் மாரிலும் தகப்பன் தோளிலுமாக விளையாடுகிறார்கள் பையன்கள்.
‘‘எத்தனை எத்தனை சந்தோஷம்சிங்கத்தைப் பெத்ததில் சந்தோஷம்!’’
எத்தனை எத்தனை முறை அந்தக் காட்சியை ஓட்டிப் பார்த்தாலும் திமுக்கென கண்ணீர்பூத்துவிடுகிறது எனக்கு!இது யாரோ ஒரு அப்பன் ஆத்தா கதை இல்லை. இந்தத் தமிழ் மண்ணில் ஒவ்வொருஅப்பன் ஆத்தா கதையும் இதுதான். பிள்ளைகள் வயிறு நிறைவதைப் பார்த்து, பெற்றவர்கள்மனசு நிறைகிற மண் இது!ஒவ்வொரு தாயும் தகப்பனும் கூடி மகிழ்ந்து ஒரு உயிரை மட்டும் படைப்பதில்லை...உலகத்தையே படைக்கிறார்கள். தாய் சுரக்கிற ஒவ்வொரு துளி தாய்ப்பாலும், கனவுவிதைக்குத் தெளிக்கிற கருணை மழைத்துளி. குடும்பத்தின் ஜீவிதத்துக்கு தகப்பன் சிந்துகிறஒவ்வொரு துளி வியர்வையும், ஒரு புதிய பிருந்தாவனத்துக்கான தியாக மழைத்துளி!

.......சேரன்....

7/7/08

கவிதை

விழாமல் இருக்கும்
தஞ்சை கோபுரம்
மட்டும் அழகுஅல்ல
விழும் உன் நிழலும்தான்....


  • வாழ்க தமிழ்

  • வாழ்வே தமிழ்

  • வாழாவே தமிழ்