7/24/08

இத கேளுங்க முதல்ல

நல்ல இசை மட்டும் அல்ல.. கவிதை துவம் வாய்ந்த வரிகள் கூட..

Listen to Subramaniyapuram Audio Songs at MusicMazaa.com

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போததெனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகைவேனே மாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சிந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போததெனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்

உன்னை இன்றி வேறு ஒரு நினைவில்ல
இனி இந்த உனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலும் உன்னோட வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகைவேனே மாற்றி

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போததெனே
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

0 comments: